×

பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது

உத்தரப்பிரேதேசம்: பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் நுழைவுத் தேர்வு மோசடியின் மூளையாக செயல்பட்ட உத்தராகண்ட்டைச் சேர்ந்த 2 பேரை உ.பி. போலீஸ் கைது செய்தது. பீகாரைச் சேர்ந்த ராகுல்குமார், ஜித்தேஷ் குமார் டேராடூனில் கல்வி ஆலோசனை மையம் நடத்தி மோசடிகளை அரங்கேற்றியது கண்டுபிடித்துள்ளனர். ஆன்லைன் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி உறுதி செய்யப்படும் என விளம்பரம் கொடுத்து இருவரும் மோசடியை அரங்கேற்றியுள்ளனர்

The post பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வு வினாத்தாளை கணினிகளில் ஊடுருவி திருடி மோசடி செய்யும் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,UP ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...